Saturday, February 11, 2012

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ஒரு லீற்றல் பெற்றோலின் விலை 12 ரூபாவினாலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 31 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றல் 35 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 149 ரூபாய் எனவும் டிசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 115 ரூபாய் எனவும், மண்ணெண்னை லீற்றர் ஒன்றின் புதிய விலை 110 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment