Wednesday, February 8, 2012

வத்தளை - ஹெமில்டன் கால்வாயில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

வத்தளை - அலபடவத்தை ஹெமில்டன் கால்வாயில் இருந்து இன்று (08) காலை 06.50 அளவில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. பழைய நீர்கொழும்பு வீதி வத்தளை என்ற இடத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஜெயராம் மகேஸ்வரன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment