Friday, February 3, 2012

திடீர் புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவைகள் பாதிப்பு-பொது மக்கள் பெரும் அவஸ்தை

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டுச்சென்ற கடுகதிபுகையிரம் திடீர் புறக்கணிப்பு காரணமாக கல்கமுவ புகையிரத நிலையத்திற்கு அண்மை நிறுத்தப்பட்டது.

கல்கமுவ புகையிரத நிலையத்திற்கு முன்பதாக ஒரு கிலோமீற்றர் தூரத்;தில் இப்புகையிரம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதில் பிரயாணம் செய்த பிரயாணிகள் தொடர்ந்த பிரயாணம் செய்ய முடியாத வண்ணம் கடும் நெருக்கடிகளுக்கு உள்ளானதாக தெரியவருகின்றது

குறிப்பாக வவுனியாவிலிருந்து நேற்றைய தினம் புறப்பட்டுசென்ற அனைத்து புகையிர வண்டிகளும் அநுராதபுரத்திலேயே தரித்து நின்றன. அதற்கு அப்பால் அவை சேவையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com