Thursday, February 9, 2012

ராகமை பிரதேசத்தை அச்சுறுத்தி வந்த முதலை பிடிக்கப்பட்டது

ராகமை பிரதேசத்தில் அண்மைக் காலமாக மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த முதலையை பிதேச மக்கள் நேற்று பிடித்துள்ளனர்.

19 அடி நீளமான இந்த முதலை அண்மையில் புல் வெட்டச் சென்ற இளைஞர் ஒருவரைக் கொன்று தனது வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொண்டதுடன், இந்தப் பிரதேசத்திலுள்ள ஆடுகள், நாய்கள் போன்றனவற்றையும் வேட்டையாடி வந்த நிலையில் நேற்று (08) ஊர்மக்களால் இந்த முதலை பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முதலையைப் பிடிக்கும் முயற்சியின் போது, இரு இளைஞர்கள் காயமடைந்தனர்.

தற்போது. பின்னர் இந்த முதலை வன பரிபாலனத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயினும், நேற்றிரவு அந்த முதலை இறந்துவிட்டது என்பது கவலை தரும் விடயமாக உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com