Friday, February 3, 2012

வெளிநாடுகளில் பணிபுரியும் வைத்தியர்களை அழைக்கத்திட்டம்.

வெளிநாடுகளில் பணிபுரியும் வைத்தியர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாக இலங்கை வைத்தியர் சங்கம் தெரிவிக்கின்றது. வேளிநாடுகளில் பணிபுரியும் வைத்தியர்களின் ஊடாக நவீன தொழில் நுட்பம் மற்றும் புதிய அறிவூட்டல் போன்ற முக்கிய சேவையை இலங்கையிலுள்ள வைத்தியர்கள் பெற்றுக் கொள்வதற்கும் பயிற்சி வழங்குவதற்குமே இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வரழைக்கப்படும் வைத்தியர்கள் ஒரு குறிப்பிட்ட கால சேவையின் பின்னர் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com