Wednesday, February 29, 2012

முதன்முறையாக குடிசன மதிப்பீட்டி 'ஈ' மதிப்பீட்டு முறை அறிமுகம்

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் குடிசன மதிப்பிட்டில் முதல் தடவையாக 'ஈ' மதீப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈ மதீப்பீடு குடிசன வீட்டு வசதிகள் கணீப்பீட்டுக்கு இணைவாக நேற்றுமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டிற்கான குடிசன வீட்டு வசதிகள் கணீப்பீட்டின் முதற்கட்டப்பணிகள் நேற்று முதல் முறையாக ஆரம்பமாகியது. இது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறும். இம்முறை கணீப்பீட்டின் முக்கிய அம்சம் ஈ கணீப்பீடாகும்.

இணையத்தளம் ஊடாக கணீப்பீட்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படும். ஆய்வு மட்டத்தில் இதற்கான வேலைத்திட்டத்தில் கொழும்பு நகரிலுள்ள 300 குடும்பங்களின் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இதன் அங்குராப்பண வைபவம் தொலை தொடர்புகள் தகவல் தொழல்நுட்ப அமைச்சில் நேற்று நடைபெற்றது.

No comments:

Post a Comment