Thursday, February 2, 2012

யாழ் கொழும்பு ரயில் சேவை அடுத்த ஆண்டில் ஆரம்பமாகும்.- இந்திய துணைதூதுவர்

2013ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையிலான புகையிர சேவை ஆரம்பிக்கப்படும் என இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பளை முதல் காங்கேசன் துறை வரையான புகையிரதப்பாதை அமைக்கும் பணிகளை இந்தியாவின் இர்க்கான் என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி தற்போது புகையிரதப்பாதை அமைப்பிற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. இவை மிக விரைவாக நிறைவு பெற்று விடும் இதன் பின்னர் ஏனைய பணிகள் வெகு வேகமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கென மூன்று பொறியியலாளர்கள் தற்போது யாழ்பாணத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் மிக வேகமாக ஏனைய திட்டமிடல் பணிகளை செய்து வருகின்றனர்.

எனவே 2013ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான புகையிர சேவையை ஆரம்பிக்க கூடியதாக இருக்கும் என்றார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com