Wednesday, February 29, 2012

மீன்கூழக்கு ஆசைப்பட்டு உயிரைப்பறிகொடுத்த குடும்பஸ்தர்- யாழ்ப்பாணத்தில் சம்பவம்

மீன்கூழ் குடித்தபோது தொண்டையில் மீன்முள்ளு சிக்குண்டதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை குப்பிளான் வாரியபுலத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த க.கிருஷ்ணகுமார் வயது 37 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

இவரது தொண்டையில் மீன்முள்ளு சிக்கியதால் இவர் சுவாசப்பிரச்சினைக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் தற்போது பிரேதப்பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment