Friday, February 10, 2012

முன்னாள் ஜனாதிபதி நஷீட்டின் பாரியாரும் குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனராம்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் பாரியாரும் குழந்தைகளும் கொழும்பில் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், ஆனால் மாலைதீவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு விவகாரங்களில் இலங்கை தலையிடாது எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளரும் சுற்றாடல் அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் புதிய ஆட்சியாளர்களுடன் இராஜதந்திர உறவுகளை முன்னெடுப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம், மாலைதீவின் புதிய ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment