Friday, February 3, 2012

லண்டன் பங்குச் சந்தையைக் குண்டு வைத்துத் தகர்க்கும் சதி

கிறிஸ்மஸ் காலத்தின் போது லண்டன் பங்குச் சந்தையைக் குண்டு வைத்துத் தகர்த்து பேரழிவை ஏற்படுத்த சதி செய்த குற்றத்தை நான்கு பிரிட்டிஷ் ஆடவர்கள் (மேல்படம்: ஏஎப்பி) ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் சேர்த்து மேலும் ஐவர் அமெரிக்க முஸ்லிம் போதகரின் போதனையால் உந்தப்பட்டு, அல் காய்தாவின் ஆதரவோடு அந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைக் கண்காணித்து வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் சோதனை நடத்தி அவர்களைக் கைது செய்தனர்.
முதலில் அனைவரும் குற்றச்சாட்டை மறுத்தனர். ஆனால் 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட அந்த நால்வர் நேற்று அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டனர்.
தீவிரவாதத்துக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரிட்டிஷ் போலிசாருக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி இது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com