Sunday, February 19, 2012

முன்னாள் உறுப்பினர்கள் 950 பேர் புனர்வாழ்வு முகாம்களில் - மேஜர் ஜெனரல் சந்தன

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 950 முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வு முகாம்களில் இருப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படுவதாகவும், இவர்களுள் 67 பெண்களும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பூந்தோட்டம், வவுனியா, மருதமடு, வெலிகந்த சேனபுர ஆகிய புனர்வாழ்வு நிலையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment