Friday, February 3, 2012

யாழ்ப்பாணத்தில் 750 மில்லியன் ரூபா செலவில் ஆடம்பர ஹோட்டல் அமைக்கப்படவுள்ளது.

யாழ்.நகரில் 750 மில்லியன் ரூபா செலவில் புதிய ஆடம்பர ஹோட்டல் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை இன்றைய தினம் பிரதம டி.எம். ஜெயரட்ண நாட்டி வைத்துள்ளார்.

ஜெட்லிங் நிறுவனத்தினால் ஜெட்விங் யாழ்.ஹோட்டல் என்னும் பெயரில் அமைக்கப்படவுள்ள இக்ஹோட்டலானது.14 மாடிகளையும் 76 அறைகளையும் கொண்டு அமையவுள்ளது.

18 மாதங்களில் கட்டி முடிப்பதற்கு திட்டமிடப்பட்ட இக்ஹோட்டலானது யாழ்.நகரிலேயே மணிக்கூட்டு வீதியில் அமையப்பெறவுள்ளது. இதன் ஆரம்ப கட்டுமானப்பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது

இதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றைய தினம் மதியம் நடைபெற்றது. இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண அளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திர சிறி கொழும்பு மாநகர சபை எதிர்கட்சித்தலைவர் மிலிந்த மொறகொட யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே யாழ். அரச அதிபர் யாழ்.மாநகர மேயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com