Friday, February 10, 2012

ஐரோப்பா நாடுகளில் புலிகளின் 420 பாடசாலைகள் இயங்கி வருகின்றன -திவயின பத்திரிகை

ஐரோப்பா நாடுகளில் புலிகளின் 420 பாடசாலைகள் இயங்கி வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் புலி மக்களினால் இந்தப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருவதகவும், ஜெர்மன், சுவிட்சர்லாந்து. பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இந்தப் பாடசாலைகள் இயங்கி வருவதாகவும் அந்த பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.

நான்கு முதல் இருபத்து ஒன்று வயது வரையிலான 20 ஆயிரம் மாணவர்கள் இந்தப் பாடசாலைகளில் கல்வி பயில்கின்றனர் எனவும், பாடசாலை மாணவர்களிடம் அறவீடு செய்யப்படும் நிதி புலிகளின் சர்வதேச வலையமைப்பு பயன்படுத்துகின்றது எனவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்ச் சோலை என்ற பெயரில் இந்தப் பாடசாலைகள் இயங்கி வருவதாக அரச புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளதாகவும், சிங்கள மக்களுக்கு எதிராக ஐரோப்பிய வாழ் தமிழ் சிறுவர்களை தூண்டும் வகையில் பாடங்கள் போதிக்கப்படுவதாகவும் திவயின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment