Tuesday, February 28, 2012

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் 1 ம் திகதி

ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வில் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை மார்ச் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரதி உதவி அரச செயலாளர் மரியா ஒடேரோவின் மூலம் முன்வைக்கப்படவுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதன் பிரேரணையின் சாரம்சத்தின் பிரதி மனித உரிமைப் பேரவையின் 47 உறுபுரிமை நாடுகளின் தூதுவர்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைப் பேரவையின் சாதாரண விதிமுறைக்கேற்ப அங்கு அந்தப் பிரேரணை சமர்பித்தல் செய்வதற்கு ஜெனிவாவில் சேவையாற்றும் நாடுகளுடைய தூதுவர்களூடாக மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் வேறு மாற்று வழிமுறையினையும் கையாள்வதற்கும் இந்த பிரேரணையை அமெரிக்கா பிரதி உதவி அரச செயலாளர் மரியா ஒடேரியாவின் மூலம் சமர்ப்பிப்பதற்கு மிகவும் யோசனையுடன் செயற்பட்டு வருதாக
தூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதி உதவி செயலாளர் மரியா ஒடேரியாவி உரையின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைக்கப்பட்டதன் பின்பு அதற்கு கையொப்பமிடும் நாடுகளின் கருத்துக்களையும் மனித உரிமை பேரவை பெற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 1 ம் திகதி ஜெனிவா நேரப்படி 10.40 க்கு அமெரிக்காவின் பிரதி உதவி அரச செயலாளர் மரியா ஒடேரோவின் மூலம் வெளியிட்ட கருத்தின் வாயிலாக இலங்கையின் பிரதிநிதியின் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கஹ நேற்று மனித உரிமைப் பேரவை ஆரம்ப உரையாற்றும் போது அதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே அறிந்து கொள்ள முடிந்தது.

இலங்கை தொடர்பாக பிரேரணையை முன்வைப்பதற்காக அமெரிக்காவிலுள்ள உயர் மட்ட அதிகாரிகள் ஜெனிவாவுக்கு வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment