Friday, February 3, 2012

கண்டியில் விபச்சாரம் செய்த 18 பெண்கள் பொலிஸரால் கைது செய்யப்பட்டள்ளனர்

கண்டி நகரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 18 பெண்களை தாம் கைது செய்துள்ளதாக கண்டி குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவுக்கான பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ. எஸ். இந்திராணி தெரிவித்துள்ளார்.

கண்டியில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தத நிலையிலேயே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநாகல் மாத்தளை கம்பளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் மத்திய சந்தை பாதையோராங்கள் படகுச் சேவை நடைபெறும் குளத்திற்கு அருகிலும் கண்டி குட்செற் மற்றும் பஸ் நிலையங்களுக்கு அருகில் வைத்துகைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 30 வயது முதல் 50 வயது வரையானவர்கள் என்றும் இவர்களை கைது செய்வதற்கு சிவில் உடையில் சென்ற பொலிஸாரே நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்ட பொறுப்பதிகாரி இவர்களிடம் பாடசாலை மாணவர்களும் சென்றுள்ளதும் தெரியவந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com