Saturday, January 7, 2012

கிளர்ச்சியாளர்கள் கிழக்கில் TMVP உடன் இரகசியப் பேச்சுவார்த்தை

ஜே வீ பீ யின் கிளர்ச்சிக் குழுவுக்கும் TMVP இற்குமிடையே கடந்த வாரம் மட்டக்களப்பு வெருகள் பகுதியில் இரகசியப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி உந்துல் பிரேமரத்தின உற்பட 5 பேர் இதில் கலந்துகொண்டனர். TMVP யை பிரதிநிதித்துவப் படுத்தி இருவர் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் கிழக்கு மாகான முதலமைச்சரும் TMVP தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மிக நெருக்கமானவர்கள் ஆவர்.

இதே நேரம் ஜே வீ பீ கிளர்சிக் குழுவிற்கு தலைமை தாங்கும் பிரேம் குமார் குனரத்தினம் திருகோணமலைப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com