Monday, January 9, 2012

கள்ளக் காதலனுக்கு பெற்ற குழந்தையை வீட்டருகில் புதைத்த தாய்- சம்மாந்துறையில் சம்பவம்

பெற்ற குழந்தையை வீட்டின் அருகிலுள்ள சுவர் ஓரமாக குழிதோண்டி புதைத்த கொடூர சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவிக்குட்பட்ட கல்லரிச்சல் 03ஆம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுகிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கள்ளத்தொடர்பு மூலம் உருவான இக்குழந்தை கடந்த டிசம்பர் 06ஆம் திகதி காலையில் பிறந்துள்ளது.
இக்குழந்தையினை குறித்த பெண்ணும் அவருடைய கள்ளம் காதலனும் இணைந்து தனது வீட்டின் அருகிலுள்ள சுவர் ஓரமாக அன்று காலை 8.00 மணிக்கு புதைத்துள்ளனர். பின்னர் குழந்தையினை பிரசவித்த தாய்க்கு ஏற்பட்ட இரத்தப் பெருக்கு காரணமாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து கல்முனை அஷ்ரப் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலைக்கு இடமாற்றப்பட்டு , அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வெளியான சில தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அக்கிராம வாசிகளால் சம்மாந்துறை பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டை அடுத்து, பொலிஸ் குழுவினரும் அம்பாரை சொக்கோ புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்ட நடவடிக்கையினால் ஞாயிறு பிற்பகல் 1.30 மணியளவில் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உதுமாலெப்பை ஆமீனாஉம்மா (வயது -36) எனவும், அவருடைய கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபர் ஆதம்பாவா அலியார் சம்சுதீன் (வயது 55) எனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com