Thursday, January 26, 2012

சுற்றுலா அபிவிருத்திக்காக புதிய விமான சேவை ஆரம்பமாகியுள்ளது

சுற்றுலா அபிவிருத்தி கருதி புதிய விமான சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எயார் செனோக் எனும் இந்த உள்நாட்டு விமான சேவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதலைமையில் பி.ஆர்.சி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் எயார் செனோக் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு ஹெலிக்கொப்டர்களையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பார்வையிட்டார்.

சுற்றுலா துறையின் அபிவிருத்தியில் தனியார் துறை பங்களிப்பு உள்வாங்கப்பட்டு உள்ளுர் விமான போக்குவரத்தை அபிவிருத்தி செய்வதற்காக இவ்விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வைபவத்தில் செனோக் நிறுவனத்தின் தலைவர் நொயல் செல்வநாயகம், பணிப்பாளர் ஹரிந்த டி கொஸ்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment