Friday, January 20, 2012

அதிகாரப் பகிர்விற்கு எதிரான திரைப்படத்தில் விமலும் சம்பிக்கவும் தோன்றுவார்கள்

அதிகாரப் பகிர்வுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் திரைப்படம் ஒன்று காண்பிக்க தயாராவதாக ஜே வி பியின் உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் என்ற விடயம் குறித்து அரசாங்க தரப்பில் யாரும் பேசமாட்டார்கள்.

ஆனால் அதிகாரப் பகிர்விற்கு எதிரான திரைப்படத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் தோன்றுவார்கள் எனவும், இது தொடர்பில் அவதான இருக்கமாறும் கோரியுள்ளார்.

அதிகாரப் பகிர்விற்கு எதிராக விமல் வீரவன்ச தீக்குளிக்க இருப்பதுடன், சம்பிக்க ரணவக்க மொட்டையடித்துக் கொள்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் போராடுவார்கள். 13ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உள்நாட்டில் குழப்பம் ஏற்பட்டுவிட்டதாக இந்தியாவுக்கு காட்டப்படும் வகையில் இந்த திரைப்படம் அமையும் என அவர்மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment