Friday, January 27, 2012

பாடசாலை சென்ற மகன் வீடு திரும்பவில்லை. ஒன்பது தினங்களாக தேடி அலையும் தாய்

பாடசாலை சென்ற தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை என்று கடந்த ஒன்பது தினங்களாக தாயொருவர் தேடி அலையும் பரிதாபம் நீர்கொழும்பு நகரில் இடம்பெற்றுள்ளது.

போருதொட்ட ,அல்பலாஹ் முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் ஆறில் பயிலும் மொஹமட் ரஸசல் (சயளழழட) என்ற சிறுவனே காணாமல் போனவராவார்.

இந்த மாணவன் கொச்சிக்கடை ,போருதொட்ட ,பள்ளியவத்தை பிரதேசத்தை சேர்ந்தவராவார் .சிறுவன் காணாமல் போனமை தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலைக்கு சென்ற தனது மகன் வீடு திரும்பவில்லை எனவும் இது தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுவனின் தாயார் ஹைனுல் பாத்திமா குறிப்பிடுகிறார்.

காணாமல் போயுள்ள சிறுவன் மூன்றரை அடி உயரம் கொண்ட கறுத்த நிறமுடையவராவார். பாடசாலை சீருடை அணிந்த நிலையிலேயே அவர் காணாமல் போயுள்ளார்.

1 comments :

arya ,  January 29, 2012 at 1:17 AM  

Hi, who supported to LTTE`s war , u all Tamil Diaspora war mentals, you Tamil Diasporas need better see a mental doctor or do sucuide.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com