Monday, January 9, 2012

யாழில் இரண்டு நாள் காணாமல் போனவர் தூக்கில் தெங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழில் இரண்டு நாட்களாக காணாமல் பேனவர் பலாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று திங்கள் கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளார். யாழ். உரும்பிராய் தெற்கில் உள்ள அகதி முகாமொன்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தம்பு சத்திலிங்கம் (வயது 44) என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

இரண்டு நாட்களாக இவரைக் காணவில்லை என அவரின் மனைவியும், பிள்ளையும் தேடிய போது அவர்களின் வசிப்பிடத்துக்கு பின்புறமாக உள்ள பலாமரத்தில் 20 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார். இதுகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளில் மேற்கொண்டுள்ளனர்.

மரணவிசாரணைகளை பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு மேற்கொண்டார். மரணவிசாரணைகளின் பின்னர் சடலம் உடற்கூற்றியல் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு கோப்பாய் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com