Sunday, January 29, 2012

இரண்டு வருடங்களில் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண த்திற்கான புகையிரச் சேவைகள் யாவும் இன்னமும் இரண்டு வருடங்களில் ஆரம்பமாகும் என் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர் இலங்கைப்போக்குவரத்து சபையின் காரை நகர் மற்றும் பருத்தித்துறை ஆகிய இரண்டு டிப்போவுக்களுக்கும் நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன்போதே அவர் இத்தகவலை வெளியிட்டார். யாழ்ப்பாணம் முன்னரைப்போல் இப்போது இல்லை இப்போது யாழ்பாணத்திற்கான போக்குவரத்து முற்றிலும் வளர்ச்சியடைந்துள்ளது.

அதிகளவான மக்கள் நாளாந்தம் யாழ்ப்பாணத்திற்கு வந்து போகின்றனர். இதனால் போக்குவரத் மிகவும் நெரிசல் உள்ளதாக உள்ளது. எனவே மிகவிரைவாக அரசாங்கம் இந்நெருக்கடியை போக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரதச் சேவைகளை இன்னமும் இரண்டு வருடங்களில் ஆரம்பிக்கும். இதற்கான சகல வேலைகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com