Sunday, January 29, 2012

முன்னாள் பெண் போராளியை திருமணம் செய்தார் இராணுவ சிப்பாய்.

கிளிநொச்சியில். இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும். விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இலங்கை இராணுவ சிப்பாய்க்கும். விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார்.

20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25ஆவது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment