Friday, January 6, 2012

நோயின் கொடுமை தாங்காது குடும்பப்பெண் கிணற்றில் வீழ்ந்து தற்கொலை.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடிப் பகுதியைச் சேந்த மனநலம் குன்றிய இளம் குடும்பப் பெண் நோயின் கொடுமை காரணமாக கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் தேடிய போது பெண்ணுடைய சடலம் வயல் ஒன்றில் உள்ள கினற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

ரவிச்சந்திரன் சரோஜினி (வயது 44) என்ற பெண்ணே மரணமடைந்தவராவர். சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் யாழ்.பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com