Sunday, January 8, 2012

விமானநிலைய பிரதான வாயல் சோதனைச் சாவடி நீக்கம்.

கட்டு நாயக்க விமான நிலையத்தின் பிரதான நுழை வாய்களில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த வீதி தடைகளை அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரயாணிகளின் வசதி கருதி இது தொடர்பான நடவடிக்கைகள் நேற்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய தெரிவிக்கிறார்.

நாட்டில் காணப்படும் சமாதான சூழ்நிலையே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார். தற்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமான நிலையத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணகளின் வசதி கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பிரயாணிகள் எதிர்கொண்டிருந்த சிரமங்கள் தீரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com