Saturday, January 28, 2012

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அதிக ஆதரவு வழங்க வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உலக அழுத்தத்தை விடவும் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளிற்கு அதிக ஆதரவு வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இதன்போது, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவலாக உள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான Van Orden தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com