மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் இன்று உயிரிழப்பு
மாளிகாவத்தை பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த நபர் இன்று உயிரிழந்துள்ளார்.
ரசுல்டீன் என்பரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார். சூட்டுச் சம்பவத்தின் போது படுகாயடைந்த இந்நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த மூன்றாம் திகதியன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இதேவேளை, சம்பவத்தில் மரணமடைந்தவரின் “ஜனாஸா” நல்லடக்கம் இன்று மாளிகாவத்தை மையவாடியில் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment