Saturday, January 7, 2012

கே.பி. இலங்கை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருப்பதை இன்டர்போலுக்கு அறிவிப்பேன்- ஜயலத்

புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் (கே.பி.) இலங்கை அதிகாரிகளின் தடுப்புக்காவலில் இருப்பதை இன்டர்போலுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். நேற்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் நான் சென்னை பொலிஸ் ஆணையாளரை சந்தித்து, இலங்கையில் கே.பி. இருப்பதை தெரிவித்தேன். இது தொடர்பான ஆவணங்களையும் நான் கையளித்தேன்' எனவும் ஜயலத் ஜயவர்தன எம்.பி. தெரிவித்துள்ளார்.

இன்டர்போலினால் தேடப்படும் கிரிமினல்கள் பட்டியலில் கே.பியும் உள்ளார். எனவே அவருக்கு இலங்கை புகலிடம் அளிக்க முடியாது எனவும் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவினால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கே.பி தேடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com