Friday, January 6, 2012

வெளிநாட்டு நாணயத்தாள்கள், தங்கக் கூறுகளை சட்டவிரோதமாக கடத்த முயனறோர் கைது

ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் மற்றும் தங்கக் கூறுகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற ஐந்து நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி ஹக்குரன பிரதேசத்தைச் சேர்ந்த 5 முஸ்லிம் நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் சென்னைக்குச் செல்லவிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களின் ஒருவருக்கு 45 வயதும் எனவும் ஏனையவர்கள் 20-25 வயசுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விமானநிலைய பாதுகாப்பு பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய நபர் ஒருவரை சோதனையிட்ட போது ஒரு தொகை தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனையடுத்து ஏற்பட்ட சந்தேகத்தில் மேலும் நால்வரை சோதனையிட்டபோது, அவர்களிடமிருந்தும் தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

30 இலட்சம் ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள், யூரோக்கள், சவூதி ரியால், குவைத் தினார் முதலான வெளிநாட்டு நாணயத்தாள்களும், 20 இலட்சம் ரூபா பெறுமதியான உருக்கிய தங்கக் கூறுகளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com