Sunday, January 29, 2012

வடக்கிலிருந்து கிழக்கிற்கு நகரும் ஜேவிபி யினர்.

நாடுபூராகவும் போராட்டம் எனும் பெயரால் பல்வேறுபட்ட சந்தேகத்துக்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் ஜேவிபி யினர் வடக்கிலிருந்து தற்போது கிழக்கின் பக்கம் நகர்ந்துள்ளனர். இவர்கள் அசமத்துவத்தின் அரண் என்னும் தலைப்பில் மட்டக்களப்பு நகரில் துண்டுப்பிரசுர விநியோகம் ஒன்றை நேற்று சனிக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு பஸ் நிலையம் மற்றும் நகர நுழைவாயிலில், மணிக்கூட்டுக் கோபுரத்தை அண்டிய பிரதேசம், வர்த்தக நிலையங்கள் போன்ற இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஜே.வி.பியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணி முக்கியஸ்தர்களால் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் வட பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த இவர்களுக்கு எதிராக யாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment