Wednesday, January 18, 2012

இனிப்பு பண்டங்கள் எனும் போர்வையில் போதைப் பொருள் விற்பனை! ஏறாவூரில் பெண் கைது.

இனிப்பு பண்டங்களாக தயாரித்து, பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைத்திருந்த ஒரு தொகை போதைப்பொருட்கள், மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் கைப்பற்றப்பட்டன ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த 138 போதைப்பொருள் பக்கற்றுக்கள் விற்பனைக்கென தயார் நிலையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் 54 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலில் ஏறாவூர், மீராகேணி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன எனவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment