Friday, January 6, 2012

இரு மணித்தியாலயத்திற்குள் தேசிய அடையாள அட்டை! ஆட்பதிவுத்திணைக்களம் நடவடிக்கை!!

தேசிய அடையாள பெற்றுக்கொள்வதற்கு, ஒரு நாள் சேவையின் கீழ் எதிர்வரும் மாதத்திலிருந்து இரு மணித்தியாலயத்தில் குறைந்த நேரத்திற்குள்ளே அடையாளயட்டை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜனரால் ஜகத் விஜேவீர தெரிவித்தார்.

இந்த ஒரு நாள் சேவையின் கீழ் அடையாளயட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் பணம் ரூபா 500. எதிர் வரும் காலத்தில் ஒரு நாள் அடையாளயட்டைக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும்போது டிஜிடல் இலக்கம் விநியோகிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளதுடன்,

தற்போது இந்த முறை இல்லாததன் காரணமாக அடையாள அட்டை பெறுநர்கள் நீண்ட நேரம் அங்கு காக்க வேண்டியிருந்தமையால் புதிய முறையின் கீழ் டிஜிடல் இலக்கம் வழங்கும் போது விண்ணப்பத்திற்கு ஏற்ப அடையாயளயட்டை தயாரிப்பதற்கு ஆயத்தமாகலாம். இதற்காக ஆகக் கூடிய நேரம் இரண்டு மணித்தியாலம் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com