Friday, January 6, 2012

பெற்றெடுத்த மறுநாள் பிள்ளையை கல்லோடு கட்டி கிணற்றில் போட்ட தாய்!

கிளிநொச்சி விசுவமடுவில் பிறந்து ஒரு நாளேயான தனது குழந்தையைக் கல்லுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொலைசெய்து விட்டு, பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளனர். அவரது கணவர் இறுதிப்போரின் போது உயிரிழந்து விட்டார். நலன்புரி நிலையத்தில் இருந்து வெளியேறி, மீளக்குடியமர்ந்த இந்தப் பெண் சில மாதங்களுக்கு முன்னர் கருத்தரித்துள்ளார்.

நேற்று முன்தினம் முதல் இவரது வீட்டில் எவரும் இல்லாததால் சந்தேகப்பட்ட அயலவர்கள் அது குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

இதன் பின்னர் கிளிநொச்சிப் பொலிஸார் அந்தப் பகுதிக்கு சென்று நடத்திய சோதனைகளின் போது, குறித்த பெண்ணின் வீட்டுக் கிணற்றில் இருந்து பிறந்து ஒரு நாளேயான் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.

போர்வை ஒன்றினால் சுற்றப்பட்டு, கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்டு குறித்த சிசுவை தாய் கிணற்றில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது ஏனைய 5 பிள்ளைகளுடன் பெண் தலைமறைவாகி விட்டார். கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com