Saturday, January 21, 2012

சென்னை விமான நிலையத்தில் மாயமாய் மறைந்த யாழ் யுவதி

சென்னை விமான நிலையத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது யாழ்ப்பாணத்தை சேர்ந்த 26வயதான தானுஷா என்ற பெண்ணே இவ்வாறு விமான நிலையத்தில் காணாமல் போயுள்ளார். சென்னையிலிருந்து கொழும்பு நோக்கி வரவிருந்த நிலையத்திலேயே இவர் இவ்வாறு காணாமல் பேயுள்ளார்.

இவர் சுங்க, குடியுரிமை பிரிவுகளின் சோதனைகளை நிறைவு செய்துகொண்டு புறப்பட தயாராக இருந்துள்ளார் ஆனால் விமானம் புறப்பட இருந்த நேரத்தில் அவர் காணாமல் போயுள்ளார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுட்டதுடன் 15 நிமிடம் தாமதமாகி குறித்த விமானம் புறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, விமானம் புறப்பட்டு செல்லும் முன் ஒரு பெண் தனது கடவுச் சீட்டு மற்றும் அனுமதி சீட்டுகளை ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றதை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் பயண ஏற்பாடுகள் முடிந்த பின்பு ஒரு பயணி வெளியே செல்ல அனுமதி கிடையாது என்பதனால் இவரை வெளியே செல்ல அனுமதித்த மத்திய தொழிற் படையினரிடம் அதிகாரிகள் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

அத்துடன், அந்த பெண் கொண்டு வந்த பயணப்பையில் வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகம் நிலவியதால் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் வந்து பயணப்பையை சோதனை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment