அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை
அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக களனி பிரதேச சபையின் தலைவர் உட்பட மேலும் பலர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, தனக்கெதிரான எந்தவொரு விசாரணைக்கும் தான் தயார் எனவும், தமனக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை நடத்துமாறும், தானே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரிடம் கேட்டுள்ளதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
களனி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பிரதேச பௌத்த மத தலைவர்கள் உட்பட பிரதேச மக்கள் தம்முடன் இருப்பதாகவும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment