Saturday, January 21, 2012

புலிகளின் சர்வதேச வலையமைப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

புலிகளின் சர்வதேச வலையமைப்பினது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் புலிச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால் முத்திரைகள் வெளிநாடுகளில் பிரசுரம் செய்யப்பட்டமை, நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்அமரதுங்க தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டம் தொடர்பில் பாராளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளின் தூதரகங்கள் வெளிநாடுகளில் உருவாக்கப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 comments :

Anonymous ,  January 22, 2012 at 2:54 PM  

thank you sir,

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com