Wednesday, January 18, 2012

நான்தான் குறுகிய காலத்தில் அதிகளவான விமானப் பயணங்களை மேற்கொண்டவன்

குறைந்த காலப்பகுதியில் நாட்டிற்குள் அதிகளவிலான விமானப் பயணங்களை மேற்கொண்ட நபர் தாமென பிரதமர் டி.எம்.ஜயரத்ன பாராளுமன்றத்தில் இன்று குறி்ப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அக்கில விராஜ் காரியவசம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் டி.எம்.ஜயரத்ன இதனைக் குறிப்பிட்டார்.

 ஒரே நாளில் நான்கு மதங்களுடன் தொடர்புடைய கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் தமது பயணங்களை இலகுபடுத்தும் நோக்கில் விமான சேவைகளைப் பயன்படுத்தியதாக பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் நேர்மையை மிகவும் பாராட்டுவதாக அக்கில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com