Friday, January 20, 2012

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை மிகக் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவான் உட்பட பலர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சுமார் 800 காட்சியறைகள் மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சினா , பாக்கிஸ்தான், இந்தியா, மலேசியா , இலங்கை ஆகிய நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது

இந்தக் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது











No comments:

Post a Comment