Monday, January 9, 2012

மாத்தறையில் புதையல் தோண்டியோர் கைது.

மாத்தறை ஹக்மனை பிரதேசத்தில் நீண்ட நாட்களாக புதையல் தோண்டி வந்த குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. மாத்தறை பிரதேச குற்றப்புலனாய்வினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். ஹக்மனை நரவல்பிட்டிய பகுதியில் மன்னர்கள் பாவித்த பெறுமதியான பொருட்கள் புதைந்து கிடப்பதாக நம்பப்படுகிறது.

இதன் காரணமாகவே இப்பகுதியில் புதையல் தோண்டும் பணிகள் இடம்பெறுகின்றன. சுற்றி வளைப்பின் போது நால்வர் கைது செய்யப்பட்டதுடன், மண் அகழும் இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com