Wednesday, January 18, 2012

யாழ்.குடாநாட்டில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ் நாவலடிப்பிரதேசத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் முதல்கட்ட வீடுகள் 48 னை தெரிவுசெய்யப்பட்ட மக்களிடம் கையளித்துள்ளார்.
 
யாழ்ப்பாணம் அரியாலை நாவலடி கடந்த 2010 பெப்பவரியில் கிருஸ்ணாவினால் அடிக்கல் நாட்டப்பட்ட இவ்வீடுகளை முதற்கட்டமாக அவரது கையாலேயே கையளிக்கப்பட்டது சிறப்பம்சம் என பேசப்படுகின்றது.
 
இந்த நிகழ்வில் அமைச்சர்களான  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில், பாரம் பரிய சிறுகைத் தொழில் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment