Thursday, January 5, 2012

இலங்கையில் தமிழ் விதவைகள் "விபச்சாரிகள்" என்று உருத்திரகுமாரன் கும்பல் பிரச்சாரம்.

கனடாவில் இராஜபக்ஷவுக்கு 600 , உருத்திரகுமாரனுக்கு 120 .--கோண்டாவில் கோதண்டராமன்--

கடந்த மாதம் கனடா ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடந்த உருத்திரகுமாரனின் கடல் கடந்த ஈழம் கூட்டத்துக்கு 120 ஆட்களே சமூகம் அளித்திருந்தனர். அதே வேளை கனடா இலங்கை தூதரகம் நடாத்திய தீபாவளி விழாவுக்கு 600 க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.

வந்திருந்த பேச்சாளர்களில் பெங்களூரைச் சேர்ந்த போல் நியுமன் என்ற இந்திய தமிழனின் பேச்சு கண்றாவியாக இருந்தது. அவனின் புழுகுகளுக்கும், இலங்கைத் தமிழ் பெண்களைக் கேவலமாக்கும் பேச்சுக்களுக்கும் கனடாவில் உள்ள கும்பல் கைதட்டியது அதை விடக் கேவலம்.

இலங்கையில் தமிழ் பகுதிகளில் செக்ஸ் டூரிசம் நடப்பதாகவும் தமிழ் விதவைகள் அந்த "தொழிலில்" ஈடுபடுவதாகவும் கதையளந்தான். 90000 விதவைகள் என்றும் அவர்களில் 50000 பேர் நாற்பது வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் சொல்ல அந்தக் கூட்டத்தில் இருந்த தமிழ் கும்பல்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதிலும் இரண்டு கிழங்கள் தங்கவேலுவும், ஈழவேந்தனும் கைதட்டியது சகிக்க முடியவில்லை.

அவன் மேலும் பேசுகையில் முன்னர் பேசாலையில் இருந்து தினமும் ஒன்பது லொறிகளில் மீன் கொழும்புக்கு அனுப்பட்டதாகவும் இப்பொழுது கொழும்பிலிருந்து பேசாலைக்கு மீன் வருவதாகவும் கதை அளந்தான். பின்னர் இலங்கையில் தமிழர்கள் மீன் பிடிக்க அனுமதியில்லை என்றும் சிங்களவர்கள்தான் மீன் பிடிக்கிறார்கள் என்றும் இன்னொரு வெடி கொளுத்தினான். இதற்கும் அங்கிருந்த தமிழ் செம்மறிகள் கைதட்டினார்கள். வந்திருந்த கூட்டத்துக்கு பேசாலை எங்கிருக்கிறது என்று கூடத் தெரியாது. அதே வேளையில் தமிழ் நாட்டு மீனவர்களின் அத்து மீறிய மீன் பிடியால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றியோ அவர்களை யாழ் மீனவர்கள் பிடித்து வைத்த விவரமோ தெரியாமல் கனடா தமிழ் புண்ணாக்குக் கூட்டம் கைதட்டியது.

அவனுடைய அடுத்த டமால் வெடி என்னவென்றால் இறுதி யுத்தத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்றதுதான். 40000 எப்படி ஒன்றரை லட்சமாக மாறியது தெரியவில்லை. புலிப் பிரசாரங்களில் நாற்பதினாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்று உலகமெல்லாம் புலிகள் அலற இந்த பெங்களூரு ஆசாமி அதை ஒன்றரை லட்சமாக புழுகினான். சிலவேளைகளில் வட்டிக்கு விடும் ஆளாக இருப்பானோ தெரியவில்லை.

உருத்திரகுமாரன் திருச்செல்வம் தலைமையில் பிரிந்து போனவர்களுக்குப் பதிலாக புது எம்.பி மாரை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கான கூட்டம் அமெரிக்காவின் "எருமையூரில்" (Buffalo) நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடல் கடந்த ஈழத்துக்கு அமெரிக்காவில் உருத்திரகுமாரன் பிரதமர். கனடாவில் திருச்செல்வம் பிரதமர். உருத்திரகுமாரன் கனடாப் பக்கம் தலை காட்டுவதில்லை. திருச்செல்வம் -நேரு குணா கும்பல் சாத்திவிடுவார்கள் என்ற பயமோ தெரியவில்லை. ஆனாலும் உருத்திரகுமாரன் கனடாவுக்கு வராமைக்கு பல காரணங்களில் முக்கியமானது அமெரிக்கா மூலம் கனடாவுக்குள் வந்த "அகதிகள்" என்றும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் இலங்கை அகதிகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் கனடா போவதாக கூறினால் நீதி மன்றத்தில் பிணை செலுத்தி கனடா - அமெரிக்க எல்லையைத் தாண்டிய பின்னர் அவர்களது பிணைப்பணம் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அப்படியான பிணைப்பணம் அனைத்தையும் உருத்திரகுமாரன் கையாடியுள்ளதாகவும் கனடா வந்தால் அந்த "அகதிகள்" தர்ம அடி கொடுக்கலாம் என்ற பயம் என்றும் தெரிவிக்கபடுகிறது.

உருத்திரகுமாரனின் எம்.பி யான ஈழவேந்தன் கடலும் கடக்க முடியாது நிலமும் கடக்க முடியாது. ஏனென்றால் அவருடைய அகதிக் கோரிக்கை இன்னமும் கனடாவினால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

உருத்திரகுமாரனின் எம்பி மார் எல்லோரும் "காசு" தாருங்கள் என்று கோரிக்கை விட்டனர். கடல் கடந்த அரசுக்கு பொற்குவைதாரீர் என்று கேட்டுக் கொண்டனர். முன்னர் சேர்த்த காசுக்கு என்ன நடந்தது என்று யாரும் சொல்லக் காணோம்.

உருத்திரகுமாரனின் உதவிப் பிரதமரான ராம் சிவலிங்கம் என்பவரை இவ்வளவு நாளும் "டாக்டர்" என்றார்கள். இவர் எந்தப் பல்கலைக் கழகத்தில் படித்தார் என்றே இதுவரை சொல்லக் காணோம். இதுநாள் வரையில் இந்த ஆள் ஒரு வேலையும் கனடாவில் செய்யவில்லை. ஒரு கம்பனியைத் தொடங்கி காசு சேர்த்து விட்டு கம்பனியை (மீராம்) வங்குரோத்து அடித்த கதைதான் அனைவருக்கும் தெரியும். தமிழனின் தலைவிதியைப் பாருங்கள்.

அங்கு கொடுக்கப்பட்டுள்ள புத்தகமொன்றில் அவர் "பேராசிரியர்" ,"பொறியியலாளர்" என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. அப்படியாயின் எந்தப் பலகலைக் கழகத்தில் அவர் படித்தார் பின்னர் வேலை செய்தார் என்பதை கடல் கடந்த மக்களுக்கு சொல்லட்டும். அதனை மற்றவர்கள் சம்பந்தப்பட்ட பலகலைக் கழகங்ககளுடன் தொடர்பு கொண்டுசரியா பிழையா என்பதைப் பார்த்துக் கொள்வார்கள். தெரிந்த வரையில் இந்த நபர் தொழிலே செய்யவில்லை என்றும் மாலைக் கண் வியாதியால் அரச உதவியில் காலம் கடத்துபவர் என்றும் கூறப்படுகிறது.

யாரும் தங்களுடைய பெயர்களுக்குப் பின்னால் M.A.,B.A.,M.B.B.S., F.R.C.S. என்றெல்லாம் போட்டுக் கொள்ளலாம். ஆனால் படிக்காமல் பலகலைக் கழகத்தின் பெயரை அத்துடன் சேர்த்தால் கண்டிப்பாக பிரச்சனைதான். B.A.(LOND) என்று பெயருக்குப் பின்னால் எழுதினால் அதனை லண்டன் பலகலைக் கழகத்திற்கு எழுதி யாரும் உறுதி செய்து கொள்ளலாம். தமிழன்கள் பலர் ஊரை ஏமாற்ற பெயருக்கு முன்னால் இப்பொழுது டாக்டர், பேராசிரியர் என்று போட்டுக் கொள்கிறார்கள். அன்டன் பாலசிங்கமும் அப்படியான ஒரு டாக்டர்தான்.

அந்த நாட்களில் வீரகேசரி பத்திரிகையில் டாக்டர்.நிட்டம்புவ நீலன் கந்தசாமி என்ற மலையாள மாந்திரீகனின் விளம்பரத்திலும் இப்படித்தான் சகல மருத்துவ பட்டங்களும் அவனுடைய பெயருக்குப் பின்னால் இருக்கும்.

கனடாவில் சில கோவில் ஐயர்மார்களுக்கு இலங்கையிலுள்ள "கராத்தே" சங்கமொன்று பி.எச்டி பட்டங்கள் கொடுத்துள்ளது. இன்னொருவர் "அமெரிக்க உலகப் பலகலைக் கழகம்" என்ற கடையில் காசு கொடுத்து ஒரு "டாக்டர்" பட்டம் வாங்கி அதற்கு விழாவே எடுத்து அமர்க்களம் செய்தார்.

உலகத் தமிழ் கலாச்சாரப் பேரவை என்ற அமைப்பில் பேராசிரியர் வீரப்பன் என்பவர் தலைவர் என்றெல்லாம் படித்திருக்கிறோம். விசாரித்ததில் அந்த நபர் மலேசியாவில் ஒரு எஸ்டேட் பள்ளிக்கூட வாத்தியார் என்பது தெரிய வந்துள்ளது.

இப்படியான அற்பன்கள்தான் தமிழர்களிடையே "தலைவர்கள்" என்று வலம் வருகிறார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com