Saturday, January 21, 2012

மதில் உடைந்து வீழுந்ததில் நீர்கொழும்பில் இரு சிறுவர்கள் பலி

விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது மதில் உடைந்து வீழ்ந்ததில் இரு சிறுவர்கள் பரிதாபகரமாக மரணத்தை தழுவியுள்ளனர் . இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை 5.30 மணியளவில் நீர்கொழும்பு பெரியமுல்லை - லாஸரஸ் வீதியில் இடம்பெற்றுள்ள்து. லாஸரஸ் வீதியை சேர்ந்த மொஹமட் நவுபர் நிப்லான் என்ற 5 வயது சிறுவனும் , மஹாஹுனுப்பிட்டி - யூட் மாவத்தையை சேர்ந்த மொஹமட் ஜெய்சம் என்ற 12 வயது சிறுவனுமே சம்பவத்தில் பலியானவர்களாவர்.

சம்பவத்தில் மரணமான 5 வயது சிறுவனின் வீட்டில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மதில் உடைந்து விழுந்ததில் இரு சிறுவர்களும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 5 வயது சிறுவன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து மரணமாகியுள்ளான் .மற்றைய சிறுவன் நீர்கொழும்பு வைத்தியசாலையிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளான்.

5 வயது சிறுவனின் (மொஹமட் நிப்லான் )மூத்த சகோதரனின் நண்பனே சம்பவத்தில் பலியான மற்றய (12வயது) சிறுவனாவான். தனது பாடசாலை நண்பனை சந்திக்க வந்த வேளையிலேயே அந்த சிறுவன் இந்த விபத்து சம்பவத்தில் பலியாகியுள்ளான்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com