Monday, January 9, 2012

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். ஆயருடன் சந்திப்பு

யாழ்.ஆயர் இல்லத்தில் இன்று திங்கள் கிழமை மாலை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சுங்ஸென் லியூங், ஜோன் டானியல் ஆகியேர் யாழ்.ஆயரைச் சந்தித்து பேசினர். சந்திப்பின்போது யாழின் அபிவிருத்தி நிலைப்பாடுகள் மற்றும் இலங்கை அரசின் அரசியல் தீர்வு விடையங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழில் மீள்கட்டுமானம், வீதி அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் போன்ற குறித்து விவாதிக்கப்பட்டதாக யாழ்.ஆயர் குறிப்பிட்டள்ளார்

யாழ்பாணத்தில் நிலவும் வேலையில்லாப் பற்றாக்குறையை நீக்க கனடிய அரசு சில தொழிற்சாலைகளை நிறுவவேண்டுமென அவர்களிடம் கேட்டுக் கொண்டதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயம் ஆண்டகை மேலும் தெரிவித்தள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com