Thursday, January 19, 2012

பெண்னொரருவரின் சடலம் நீர்கொழும்பில் மீட்பு

நீர்கொழும்பு பொலிஸாரால் இன்று காலை பெண்னொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கொழும்பு வீதியில் கொப்பரா சந்தி அருகில் கீள்ஸ் சுப்பர் மார்க்கட் கட்டிடத்தின் பின்னால் உள்ள வெற்றுக் காணியில் இன்று காலை 9.30 மணியளவில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் யாசகம் செய்யக் கூடிய ஒருவருடையதாக இருக்கலாம் என்று பொலுஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

No comments:

Post a Comment