Saturday, January 21, 2012

கப்பம் பெற்ற வெலிக்கடை சிறைச்சாலையின் இரண்டு அதிகாரிகள் உட்பட் ஐவர் கைது

நிதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற சம்பவம் ஒன்று மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரைதொடர்புபடுத்தி சந்தேகநபர்கள் குறித்த நிறுவன முகாமையாளரை தொலைபேசி மூலம் அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அத்துடன பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் பொலிஸார் பல்வேறு தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் குறித்த வங்கிக் கணக்கின் உரிமையாளரையும் பணத்தை சந்தேகநபர்களுக்கு கைமாற்றிய பெண்ணையும் கைது செயதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வெலிக்கடை சிறைச்சாலையின் இரண்டு அதிகாரிகள் உட்பட் ஐந்து சந்தேகநபர்களே இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவிதத பொலிஸாhஇவர்களை கைது செயதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment