Friday, January 20, 2012

விடுதலைப் புலிகள் தொடர்பாக அவதானமாக இருக்கிறோம் - கோத்தபாய

தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில், புலனாய்வுத் தரப்பினர், தொடர்ந்தும் அவதானித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மாத்தளை, கோஹலன்வல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் நபர்கள் இருப்பதை மறந்து விடக்கூடாது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment