Monday, January 30, 2012

விற்பனைக்காக ஹெரோயின் வைத்திருந்த குற்றவாளிக்கு மரண தண்டனை

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன பி.சுரசேன குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2008 செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தை பகுதியில் வைத்து ஆறு கிலோகிராம் ஹெரோயினுடன் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதால். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment