லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு மூன்றாண்டுகள்
சிரேஷ்ட ஊடகவியாலாளரும்ச சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்தவருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.
இலங்கை சுதந்தர ஊடக துறைக்கு அளப்பரிய சேவையாற்றிய அவர் இலங்கையில் திறமைமிகு சட்டத்தரணிகளில் ஒருவராகவும் பிரபல்யமடைந்திருந்தார்.
இவர் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கல்கிசை பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் கொல்லப்பட்டார். இறக்கும் போது லசந்தவின் வயது 50 ஆகும்.
இதேவேளை, சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பெட்ரிகா ஜோன்ஸ் பயணித்த காரை பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படும் ஒருவரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
ஊடகவியலாளர் பெட்ரிகா ஜோன்ஸ் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
மிரிஹான நடுகாரவத்த பகுதியில் தாம் காரை செலுத்திக் கொண்டிருக்கும் போது சந்தேக நபர் மோட்டார் சைக்கிளில் தம்மை பின்தொடர்ந்ததாக ஊடகவியலாளர் பெட்ரிகா ஜோன்ஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
0 comments :
Post a Comment