Thursday, January 26, 2012

யாழ் மாநகர சபையில் அமளிதுமளி. ஆழும், எதிர்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

யாழ். மாநகர சபையின் எதிர் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 11 பேர் மாநகர சபை அமர்வை பகிஷ்கரித்துவிட்டு சற்று முன்னர் வெளிநடப்புச் செய்துள்ளனர். இவ்வாறு வெளியேறிய ஆழும்கட்சி உறுப்பினர்களின் ஒருவரான மங்கள நேசனிடம் இலங்கைநெற் கேட்டபோது, யாழ். மாநகர சபை மேயர் சர்வாதிகாரப் போக்குடன் செயற்படுவதாகவும், மூத்த உறுப்பினரான தனது முன்மொழிவுகளைக்கூட அவர் ஏற்க தயாராக இல்லாத நிலையில் சபையில் இருப்பதில் அர்த்தமற்றது என வெளியேறியதாக தொவித்தார்.

இந்த நிலையில் சபையை விட்டு வெளிநடப்புச் செய்தவர்கள் யாழ். மாநகர சபை மேயரின் ஜனநாயக விரோத நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்காலத்தில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment