Friday, January 27, 2012

சம்பள முரண்பாட்டைத் தீர்கக்கோரி பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

சம்பள முரன்பாட்டை நீக்க கோரி நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் ஒரு நாள் அடையாள பகீஸ்கரிப்பில் நேற்று ஈடுபட்டனர்.இதில் யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பபையும் தெரிவித்ததோடு அடையாள பணிப்புறக்கணிப்பில் இணைந்து கொண்டனர்

தங்களுக்கு குறிக்கப்பட்டுள்ள சம்பளத்தை தருமாறும், சம்பள முரண்பாடுகளைத் தீர்த்து சுமூகமான நடைமுறையைப் பின்பற்றுமாறும் கோரியே இவர்கள் இந்த முழுநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார்.

தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிக்கப்பட்டுள்ள சம்பள நிலுவைகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் 25 வீதமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே தாங்கள் வேலை நிறுத்தில் குதித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இதேவேளை தமது இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி 1 ஆம் திகதியில் தொடக்கம் நாடாளாவிய ரீதியில் கடும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment